உறுப்பு தானம்: மருத்துவமல்ல, வணிகம்!
BLOG
10/13/2025


மனித உடலின் ஒவ்வொரு உறுப்பும் உயிரின் தெய்வீக அங்கம்; ஆனால் இன்றைய மருத்துவ உலகில் அந்த தெய்வீக அங்கங்கள் “வணிகப் பொருளாக” மாறிவிட்டன. உறுப்பு தானம் என்ற புனிதமான சொல்லின் பின்னால் மிகப்பெரிய பண வட்டாரங்கள் இயங்குகின்றன. இந்த உறுப்பு தானத்திற்கு பின்னால் ‘கெடவர் பிசினஸ்’ (Cadaver Business) என்ற பெயரில் இயங்கும் ஒரு நெட்வொர்க் உள்ளது — அது மனித உடலை பொருளாதார ஆதாயத்துக்காகப் பயன்படுத்தும் ஒருங்கிணைந்த உலக வணிகம். ஒரு சிறுநீரகம் லட்சக்கணக்கில் விற்கப்படுகிறது; கல்லீரல், இதயம், கண், எலும்பு மஜ்ஜை போன்றவற்றுக்கும் சந்தை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை பெரும்பாலும் பணக்காரர்களின் உயிரைக் காப்பதற்காக ஏழைகள் அல்லது அடையாளம் தெரியாதவர்களின் உடல்களில் இருந்து பெறப்படுகின்றன. மருத்துவ அனுமதி, அறக்கட்டளை பெயர், சட்ட அனுமதி என பல போர்வைகள் போட்டாலும், இதன் அடியில் “மனித உடல் வணிகம்” தான் நடக்கிறது. மக்களிடம் “நீங்கள் இறந்த பின் உங்கள் உறுப்புகளை தானமாக அளித்தால் பலருக்கு உயிர் கிடைக்கும்” என்று கூறப்படுகிறது; ஆனால் யாருக்கு அந்த உறுப்பு போகிறது, யார் அதை வாங்குகிறார்கள், எந்த விலையில் அது மாற்றப்படுகிறது என்பதற்கெல்லாம் தெளிவான வெளிப்படை இல்லை. மனிதாபிமானம் என்ற முகமூடியின் பின்னால் மருத்துவ நிறுவனங்களும் மருந்து மாபெரும் நிறுவனங்களும் சேர்ந்து பணம் அள்ளும் ஓர் அமைப்பு செயல்படுகிறது.
இங்கே யாருக்கெல்லாம் உறுப்புகள் செயலிழந்து உறுப்பை தானமாக பெற்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்கள் என்று ஒரு சிறிய ஆய்வு செய்து பார்த்தால், யாரெல்லாம் ஏதேனும் ஒரு தொந்தரவுகளுக்காக தொடர்ந்து ரசாயன மருந்துகளை எடுத்துக் கொள்கிறார்களோ, அவர்களுக்கே இந்த உறுப்பு செயலிழப்பு வரை போகிறது என்பதை தெளிவாக காணலாம். ஒருவருக்கு உடலில் ஏற்படும் சிறிய தொந்தரவு, இயற்கையாகவே சில நாட்களில் சரியாகிவிடும் நிலையில் இருந்தாலும், அதை சரி செய்வதற்காக கொடுக்கப்படும் இந்த ரசாயன மருந்துகளே நோயை உடலில் தொடர்ந்து தேக்கி வைத்து, அதை மெதுவாக உறுப்புகளை பலவீனப்படுத்தி, இறுதியில் உறுப்பு செயல் இழப்பு நிலைக்கு இட்டுச் செல்கின்றன. அதாவது, உடலை குணப்படுத்துவதற்காக எடுத்த மருந்தே, உடலை அழிக்கும் வல்லுநராக மாறுகிறது.
உண்மையில் உடல் தானாகவே தன்னை புதுப்பிக்கக் கூடியது; கல்லீரல், தோல், எலும்பு, இரத்தம் எல்லாம் மீண்டும் உருவாகும் இயற்கை திறனை உடல் பெற்றிருக்கிறது. அதனால் உறுப்புகளை “தானம்” செய்ய வேண்டிய நிலை வராமல் இருக்க, உடலை இயற்கையின் விதியில் பாதுகாப்பதே உண்மையான தீர்வு. சரியான உணவு, தூக்கம், சுவாசம், இயற்கை வாழ்க்கை – இவையே நம் உடலை குணப்படுத்தும் மருந்துகள். உறுப்பு தானம் உயிரைக் காப்பது போலத் தோன்றினாலும், அதற்குப் பின்னால் உயிர் விற்பனை செய்யும் வணிகம் மறைந்திருக்கிறது. உண்மையான தானம் பணமில்லா அன்பு; ஆனால் இன்றைய உறுப்பு தானம் மனிதனின் உடலை பொருளாதார பொருளாக மாற்றி விட்டது.
உடலை பாதுகாப்போம், இயற்கையோடு வாழ்வோம்
கு.நா. மோகன்ராஜ்
மரபு வழி தொடு சிகிச்சையாளர்
Founder of Happy and Healthy Life Solutions
உறுப்பு தானம்: மருத்துவமல்ல, வணிகம்!
“பணம் படைத்த எட்டு பேருக்காக ஒரு சாமானியன் கொல்லப்படுகிறான். – உறுப்பு தானம்.”
